குற்றாலம்
மூலிகைகள் நிறைந்த அருவிகள்
தென்காசியில் இருந்து 5 km தொலைவில் உள்ளது நம் குற்றாலம். அழகிய அருவிகளின் அரசி நம் குற்றாலம். இங்கு பல அருவிகள் உள்ளன . திரும்பும் இடமெங்கும் கொட்டும் அருவி சத்தம் காதை இனிமையாக்கும் . பழைய குற்றால அருவி , மெயின் அருவி, ஐந்தருவி , புலியருவி , சிற்றறுவி , செண்பகாதேவி அருவி , தேனருவி , பழந்தோட்ட அருவி என பல அருவிகள் இங்கு இயற்கையுடன் கொஞ்சி விளையாடும் அழகோ அழகு.....
மலை மேல் உள்ள மூலிகை செடிகளை கடந்து வருவதால், இது மூலிகை நிறைந்த அருவியாகக் கொட்டுகிறது. எனவே இதில் குளித்தால் நோய் நொடி இன்றி வாழலாம் . ஆகையால் இது தென்னகத்தின் மூலிகை நிறைந்த அருவி (south indian spa) என அழைக்கப்பெறுகிறது.
தென்காசியை தாண்டும்போதே தென்றல் காற்று நம்மை வரவேற்கும். குற்றாலம் வந்தவுடன் இனிமையான குளிர் காற்றும் , பசுமையான மரங்களும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். தூரத்தில் அருவிகளின் சத்தம் , ஆங்காங்கே மக்கள் கூட்டம், குரங்குகளின் சேட்டைகள் என குதூகல பயணமாக குற்றாலம் அமையும்.
Comments
Post a Comment